search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்சாரம் தாக்கி"

    • கவியரசன் மீது திடீரென எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்தது.
    • பரிசோதித்த டாக்டர்கள் கவியரசு வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அடுத்த காரப்பாடி கிராம த்தை சேர்ந்தவர் கவியரசு (வயது 45). இவர் எலக்ட்ரீசி யனாக வேலை செய்து வந்தார். இவருக்கு சித்ரா என்ற மனைவும் மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ள னர்.

    இந்த நிலையில் கவியரசு கொமார கவுண்டன் பாளை யம் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் பழுது அடைந்த மின் மோட்டாரை சரி செய்து கொண்டிருந்தார்.

    அப்போது கவியரசன் மீது திடீரென எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்தது. இதில் அவர் கீழே விழுந்தார். இதை கண்ட உடன் இருந்த பிரகாஷ் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்சு மூலம் சத்தியமங்கலம் அரசு மரு த்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் கவியரசு வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து கவியரசு உடல் பிரேதபரி சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

    இது குறித்து புளியம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவராண நிதி
    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

    திருவட்டார்:

    கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூர் அருகே தோப்புவிளை பகுதியை சேர்ந்தவர் சோம்ராஜ் (வயது 55), வாழைத்தார் வியாபாரி. இவரது மனைவி ஜெயசித்ரா (45). மகன் அஸ்வின் (21), மகள் ஆதிரா (24) ஆகியோர் நேற்று வீட்டில் மின்சாரம் தாக்கி பலியானார்கள். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது நேற்று பெய்த காற்று-மழை காரணமாக இவர்களது வீட்டு பக்கத்து வீட்டிலிருந்த மின்சார வயர் அருகிலுள்ள தகர மேற்கூரையில் பட்டபடி இருந்துள்ளதும் அந்த நேரத்தில் அஸ்வின் எடுத்து வந்த இரும்பு கம்பி, தகர மேற்கூரையில் பட்டதால் மின்சாரம் தாக்கி கீழே விழுந்ததும் தெரியவந்தது. மேலும் அவரை தாய் ஜெயசித்ரா மற்றும் சகோதரி ஆதிரா ஆகியோர் ஓடி வந்து காப்பாற்ற முயன்றபோது அவர்களும் மின்சாரம் தாக்கி பலியாகி இருப்பதும் தெரியவந்தது.

    பலியான ஆதிரா 8 மாத கர்ப்பிணி என்பது வேதனையான சம்பவமாக அமைந்தது. இந்த சம்பவத்தில் அவரது வயிற்றில் இருந்த குழந்தையும் இறந்து விட்டது. அவருக்கு கடந்த 9 மாதங்களுக்கு முன்பு தான் குளச்சலை சேர்ந்த ஸ்ரீசுதன் என்பவருடன் திருமணமாகி உள்ளது.

    கர்ப்பிணியான ஆதிரா வளைகாப்புக்கு பிறகு பிரசவத்திற்காக பெற்றோர் வீட்டுக்கு வந்தபோது தான் மின்சாரம் தாக்கி இறந்துள்ளார். அவரது கணவர் ஸ்ரீசுதன், ஆந்திர மாநிலத்தில் வேலை பார்த்து வருகிறார். அவருக்கு உறவினர்கள் தகவல் கொடுத்துள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், அங்கிருந்து உடனடியாக ஊருக்கு புறப் பட்டுள்ளார். இதற்கிடையில் பலியான 3 பேரின் உடல்களும் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அங்கு இன்று பிரேத பரிசோதனை நடக்கிறது.

    அதன்பிறகு கல்லூரி மாணவன் அஸ்வின், தாய் ஜெயசித்ரா ஆகியோரது உடல்கள் ஆற்றூரில் உள்ள அவர்களின் வீட்டின் அருகில் அடக்கம் செய்யப் படுகிறது. கர்ப்பிணி பெண் ஆதிராவின் உடல் அவரது கணவரிடம் ஒப்படைக்கப் பட்டு குளச்சலில் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இதற்கிடையில் மின்சா ரம் தாக்கி கர்ப்பிணி பெண் உள்பட 3 பேர் இறந்த சம்பவத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேதனை தெரி வித்துள்ளார். இந்த துயரமான செய்தியினை கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

    குடும்பத்தினரை இழந்து வாடும் சோம்ராஜ் மற்றும் அவரது உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறு தலையும் தெரி வித்துக்கொள்வ தோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் முதல்- அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தர விட்டுள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.

    • குடிநீர் தொட்டியில் தண்ணீர் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.
    • சங்கராபுரம் அடுத்த மூரார்பாளையம் கிரா மத்தை சேர்ந்தவர் அர்ச்சு ணன்.

    கள்ளகுறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட் டம் சங்கராபுரம் அடுத்த மூரார்பாளையம் கிரா மத்தை சேர்ந்தவர் அர்ச்சு ணன் (வயது 75). அதே பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் தண்ணீர் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. குடிநீர் வீணாகி செல்வதால் மி்ன்மோட்டரை நிறுத்த அங்கிருந்து சுவிட்ச்சை அணைக்க அர்ச்சுணன் முயன்றார்.

    அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய மணி வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

    • புதிய வீட்டிற்கு மின் இணைப்புகள் வழங்குவதற்காக அருகில் உள்ள வீட்டில் இருந்து மின்சாரம் எடுக்கும் போது மின்சாரம் பாய்ந்ததில் முருகன் தூக்கி வீசப்பட்டார்.
    • அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    பென்னாகரம்,

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே புளிக்கரை பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (வயது45). எலக்ட்ரீசியன். இவர் தனது உறவினரான பென்னாகரம் எம்.கே.எஸ். நகர் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரின் வீட்டிற்கு எலக்ட்ரீசியன் வேலை செய்ய வந்துள்ளார்.

    புதிய வீட்டிற்கு மின் இணைப்புகள் வழங்குவதற்காக அருகில் உள்ள வீட்டில் இருந்து மின்சாரம் எடுக்கும் போது மின்சாரம் பாய்ந்ததில் முருகன் தூக்கி வீசப்பட்டார்.

    இதில் படுகாயம் அடைந்த முருகனை அக்கம் பக்கத்தினர் மீட்டு பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக உடல் அனுப்பப்பட்டது.

    இது குறித்து பென்னாகரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மின்சாரம் தாக்கி ஆண் மயில் பரிதாபமாக இறந்தது
    • வனத்துறை அலுவலர்கள் விரைந்து வந்து ஆண் மயில் உடலை மீட்டு வெள்ளோடு பறவைகள் சரணாலயத்திற்கு எடுத்து சென்றனர்.

    ஈரோடு,

    ஈரோடு, சங்க நகர் 7-வது வீதி, தென்றல் நகரில் இன்று காலை ஆண் மயில் ஒன்று பறந்து வந்து கொண்டிருந்தது. அந்தப் பகுதியில் இருந்த மின்சார வயரில் ஆண் மயிலின் தோகை எதிர்பாராத விதமாக பட்டது.

    இதனை அடுத்து மின்சாரம் தாக்கி ஆண் மயில் கீழே விழுந்தது. பின்னர் சிறிது நேரத்தில் ஆண் மயில் பரிதாபமாக இறந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    வனத்துறை அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆண் மயில் உடலை மீட்டு வெள்ளோடு பறவைகள் சரணாலயத்திற்கு எடுத்து சென்றனர்.

    • உறவினர் வீட்டில் மின்விளக்கு எரியாமல் இருந்தது.
    • எதிர்பாராத விதமாக சதீஷ் மீது மின்சாரம் பாய்ந்தது.

    மயிலாடுதுறை:

    கொள்ளிடம் அருகே எருக்கூர் கிராமம் மேலத்தெருவை சேர்ந்தவர் ராமசாமி மகன் சதீஷ் (வயது 28).

    எலக்ட்ரீசியன். இந்த நிலையில் சம்பவத்தன்று சதீஷ் தனது பெரியப்பா நாராயணன் என்பவரது வீட்டில் மின்விளக்கு எரியாமல் இருந்ததால், அவரது வீட்டிற்கு சென்று மின் வயரை சரி செய்து கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக சதீஷ் மீது மின்சாரம் பாய்ந்தது.

    இதில் அவர் வீட்டிற்குள்லேயே சுருண்டு விழுந்து இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சதீஷ் உடலை கைப்பற்றி சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சதீசுக்கு மனுஷா (23) என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • டிரான்ஸ் பார்மரில் வேலுசாமி ஏறி மின் கம்பியை பிடித்தார்.
    • மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    ஈரோடு:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள வெள்ளகோவில் அடுத்த அய்யம்மபாளையம் மேட்டுபாளையம் பகுதியை சேர்ந்தவர் வேலுசாமி (49).

    இவர் காங்கயம் பகுதியில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.இவரது மனைவி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

    மேலும் அவருக்கு குழந்தைகள் இல்லாததால் அவரது தம்பியுடன் இருந்து வந்தார். மேலும் அவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டு வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் வேலுசாமி ஈரோடு மாவட்டம் சிவகிரி அடுத்த அஞ்சூரில் உள்ள தனது அக்கா வீட்டுக்கு சென்று வருவதாக கூறி விட்டு சென்றார்.

    இந்த நிலையில் சிவகிரி அடுத்த நல்லசெல்லிபாளையம் பகுதியில் உள்ள ஒரு டிரான்ஸ் பார்மரில் வேலுசாமி ஏறி மின் கம்பியை பிடித்தார். அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இதையடுத்து ஆம்புலன்சு மூலம் அவரது உடலை மீட்டு பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இது குறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • டிரான்ஸ்பார்மர் பராமரிப்பு பணி நடைபெற்றது.
    • அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியது.

    கோபி:

    நம்பியூர் ஈஸ்வரன் கோவில் வீதி கோரக்காட்டு தோட்டத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 59). இவர் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வேட்டைக்காரன் கோவிலில் உள்ள துணை மின் நிலையத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார்.

    சம்பவத்தன்று துணை மின் நிலையத்தில் உள்ள டிரான்ஸ்பார்மர் பராமரிப்பு பணி நடைபெற்றது. இந்த பணியில் சண்முகம் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

    அப்போது அவரை எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியது. இதில் அவர் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிாிழந்தார்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் கோபி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சண்முகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டின் முன்நிழல் கூறை அமைப்பதற்காக இரும்பு தூண்கள் அமைக்கப்பட்டு இருந்தது.
    • அதில் மின்கசிவு இருந்துள்ளது.

    அந்தியூர்:

    அந்தியூர் அருகே உள்ள மாத்தூர் மரவபாளையம் பகுதியை சேர்ந்தவர் மோகனசுந்தரம் (43). கட்டுமான தொழிலாளி.

    இவர் சம்பவத்தன்று இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். பின்னர் நள்ளிரவில் எழுந்து வீட்டிற்கு வெளியே வந்துள்ளார்.

    அப்போது வீட்டின் முன்நிழல் கூறை அமைப்பதற்காக இரும்பு தூண்கள் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த துணை பிடித்துள்ளார். அதில் மின்கசிவு இருந்துள்ளது. இதனால் மோகனசுந்தரம் தூக்கி வீசப்பட்டார்.

    அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து உடனடியாக அவரை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி மோகனசுந்தரம் பரிதாபமாக இறந்தார்.

    இவருக்கு திருமணம் ஆகி மனைவி, மகன், மகள் உள்ளனர். இது குறித்து வெள்ளித்திருப்பூர் சப்- இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • சவுந்தரராஜன் டிரான்ஸ்பார்மரில் ஏறி பீஸ் மாற்றி கொண்டு இருந்த போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது.
    • இதையடுத்து அவர் மயங்கி டிரான்ஸ்பாரிலேயே தொங்கி கொண்டு இருந்தார்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள பெரிய கள்ளிப்பட்டி ஓலக் காரன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் சவுந்தரராஜன் (வயது 43). விவசாயி. இவருக்கு உமா என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.

    சவுந்தரராஜன் அந்த பகுதியில் உள்ள ஒரு விவசாய தோட்டத்தை குத்த கைக்கு எடுத்து மல்லிகைப்பூ சாகுபடி செய்து தோட்ட வேலைகளை கவனித்து வந்தார்.

    இந்த தோட்டத்துக்கு அருகே பம்ப் செட் கிணறு ஒன்று உள்ளது. மேலும் அருகே டிரான்ஸ் பார்மர் உள்ளது. மேலும் பம்ப் செட்டில் மின் இணைப்பு பழுது ஏற்படும். அப்போது அருகே உள்ள டிரான்ஸ்பார்மரில் சுவிட்ஸ் ஆப் செய்து விட்டு சுந்தரராஜன் ஏறி சரி செய்வது வழக்கம்.

    இந்த நிலையில் நேற்று சவுந்தரராஜன் தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சி கொண்டு இருந்தார். அப்போது பம்ப் செட்டில் மின்சாரம் தடைபட்டது.

    இதையடுத்து வழக்கம் போல் சவுந்தரராஜன் டிரான்ஸ்பார்மரில் ஏறி பீஸ் மாற்றி கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் அலறி துடித்தார்.

    இதையடுத்து அவர் மயங்கி டிரான்ஸ்பாரி லேயே தொங்கி கொண்டு இருந்தார்.

    இதை கண்ட அக்கம் பக்கத்தினர் மற்றும் அவரது உறவினர்கள் அவரை மீட்டு பு.புளியம்பட்டியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    மேல் சிகிச்சைக்காக சத்தியமங்க லம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சுவிட் போர்டில் இருந்து எதிர்பாராத வகையில் மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட தமிழ்செல்வி பரிதாபமாக இறந்தார்.
    • இது குறித்து கருங்கல்பாளைளயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு பி.பெ.அக்ரஹாரம், சையது காசீம் வீதியை சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மனைவி தமிழ்செல்வி (38). இவர் அக்ரஹாரம் நஞ்சப்பா நகரில் இட்லி கடை வைத்து நடத்தி வந்தார்.

    சம்பவத்தன்று கடையில் பாத்திரம் கழுவும் இடத்தை தமிழ்செல்வி சுத்தம் செய்து கொண்டிருந்தார்.

    அப்போது அருகில் இருந்த சுவிட் போர்டில் இருந்து எதிர்பாராத வகையில் மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட தமிழ்செல்வி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கருங்கல்பாளைளயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • சித்தேரி பகுதியில் நேற்று பெய்த மழையினால் மின்கம்பி அருந்து கீழே கிடந்தது.
    • கீழே கிடந்த இந்த மின்கம்பி அந்த வழியாகச் சென்ற பெரியசாமி எதிர்பாராத விதமாக மிதித்தார். அப்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சிறுபாக்கம் சித்தேரி பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி (வயது 68) விவசாயி. இவர் இன்று அதிகாலை 3 மணி அளவில் இயற்கை உபாதை கழிப்பதற்காக அந்த பகுதி வழியாக சென்றுள்ளார்.

    அப்போது சித்தேரி பகுதியில் நேற்று பெய்த மழையினால் மின்கம்பி அருந்து கீழே கிடந்தது. கீழே கிடந்த இந்த மின்கம்பி அந்த வழியாகச் சென்ற பெரியசாமி எதிர்பாராத விதமாக மிதித்தார். அப்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இது பற்றி தகவல் அறிந்த சிறுபாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பெரியசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேப்பூர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×